Breaking
Sun. May 19th, 2024
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் போன்றவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப் முடியாது என மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்களின் கைப்பொம்மையாக சோபித தேரர் செயற்பட்டு வருவதாக ஞானசார தேரர் அண்மையில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு பதிலளிப்பதன் மூலம் அவர்களுக்கு ஓர் இடம் ஏற்பட்டு விடும் என சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
மாடுகள் இருக்கின்றனதானே? (இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு,அவ்வாறான மாடுகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை)
பதிலளிக்காமல் இருப்பதே சிறந்த பதிலாக இருக்கும். அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாக ஞானசார தேரருக்கும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
இன்று அதே குற்றச்சாட்டை என்மீது சுமத்தியிருக்கின்றார். இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப் போவதில்லை என சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *