கிராந்துருகோட்டைப் பகுதியில் காட்டு யானை ஒன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஊவா மாகாணசபைத் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரசியல் கட்சி ஆதரவாளர்களே இவ்வாறு யானையை சுட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.வன ஜீவராசிகள் திணைக்களமும் பொலிஸாரும் இணைந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (VK)