Breaking
Fri. May 17th, 2024

நேபா­ளத்தில் ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் அந்­நாட்டில் மக்கள் பாதிக்­கப்­பட்டு, வீடு­களை இழந்தும் உண்ண உண­வின்­றியும் துன்­பப்­ப­டு­கின்­றனர். இதன்­படி நேபாள அர­சாங்கம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான அத்­தி­யா­வ­சிய பொருட்கள் தொடர்­பி­லான பட்­டி­ய­லொன்றை இலங்கை அர­சாங்­கத்­திடம் வழங்­கி­யுள்­ளது. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான பொருட்­களை சிவில் அமைப்­பு­களோ அல்­லது தனி நபரோ வழங்க விரும்­பினால் மாவட்ட செய­லா­ள­ரிடம் ஒப்­ப­டைக்க முடியும். மேலும் இது தொடர்பில் மேல­திக தக­வல்­களை பெற­வேண்­டு­மாயின் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தை அணுகு­மாறு பிர­தமர் அலு­வ­லகம் அறி­வித்­துள்­ளது.

இதே­வேளை உலர் உணவு, அத்­தி­யா­வ­சிய பொருட்கள் அடங்­கிய நிவா­ரண சேவை அதி­கா­ரிகள் குழு நேற்று காலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமா­னத்தில் கொழும்பு கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து கத்­மண்டு நகரை நோக்கி பய­ணித்த­தா­கவும் பிர­தமர் அலு­வ­லகம் தெரி­வித்­தது.

இது தொடர்பில் பிர­தமர் அலு­வ­லகம் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நேபாள தேசத்தில் ஏற்­பட்ட பூமி அதிர்ச்­சி­யினால் அந்­நாட்டில் பல பகு­திகள் சேதங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளன. மேலும் அனர்த்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் வீடு­களை இழந்துஇ உண்ண உண­வின்றி கஷ்­டப்­பட்டு வரு­வ­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. எனவே இது குறித்து நேபாள அரசின் தேவையை கண்­ட­றி­வ­தற்­காக விசேட விமானம் நேற்று முன் தினம் நேபா­ளத்தை நோக்கி புறப்­பட்­டது.

இதற்­க­மைய பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான பொருட்களை நேபாள அரசு பட்­டி­ய­லிட்­டுள்­ளது. இது குறித்­தான பட்­டி­ய லின் அடிப்­ப­டையில் வீடு­களை இழந்தோர் தங்­கு­மிட வச­தி­க­ளின்றி இருப்­ப­துடன்இ கூடாரம் அமைப்­ப­தற்கு தேவை­யான உப­க­ர­ணங்­களும் இல்­லாமல் கஷ்­டப்­ப­டு­கின்­றனர். மேலும் உறங்­கு­வ­தற்கு தேவை­யான மெத்­தைகள் மற்றும் போர்­வை­க­ளின்றி உறக்கம் இல்­லாமல் தவிக்­கின்­றனர். அதே­போன்று குடிப்­ப­தற்கு உகந்த வகையில் குடிநீர் வச­தி­கள்­ இன்­மையால் பாதிக்­கப்­பட்­டுள்­ள னர்.

இந்­நி­லையில் அப்பட்­டி­யலில் மெத்தைஇ போர்வைஇ குடிநீர்இ அத்­தி­யா­வ­சிய பொருட் கள் மற்றும் கூடாரம் அமைப்­ப­தற்கு தேவை­யான பொருட்­களே கோரப்­பட்­டுள்­ளன. மேற்­படி பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான பொருட்­களை சிவில் அமைப்­பு­களோ அல்­லது தனி நபரோ வழங்க விரும்­பினால் மாவட்ட செய­லா­ளரை அணுக­மு­டியும் அத்­தோடு இது தொடர்பில் மேல­திக தக­வல்­களை பெற­வேண்­டு­மாயின் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தை அனுக முடியும்.

இதேவேளை உலர் உணவு, அத்தியாவ சிய பொருட்கள் அடங்கிய நிவாரண சேவை அதிகாரிகள் அடங்கிய குழு ஸ்ரீல ங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் நேற்று காலை 8.15 மணி க்கு கொழும்பு கட்டு நாயக்க விமான நிலையத்திலிருந்து காத்மண்டு நகரிற்கு பயணித்தது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *