Breaking
Mon. May 20th, 2024

வேலை நிறுத்தப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள பல்­க­லைக்­க­ழக கல்வி சாரா ஊழி­யர்கள் இன்று (5) முதல் கட­மைக்குத் திரும்ப வேண்டும் என அர­சாங்கம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அவ்­வாறு இன்று பணிக்கு திரும்­பாத ஊழி­யர்­கள் பணியில் இருந்து நீங்­கி­ய­வர்­க­ளாக கரு­தப்­ப­டு­வார்கள் எனவும் பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மொஹான் டீ சில்வா குறிப்­பிட்­டுள்ளார்.

பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரினால் வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கு­றிப்­பிட்ட விட­யங்கள் தெளிவு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.இந்­நி­லையில் அர­சாங்­கத்தின் இந்த செயற்­பா­டு­களால் தமது தொழிற்­சங்க நட­வ­டிக்­கையை நிறுத்தப் போவ­தில்லை என, பல்­க­லைக்­க­ழக தொழிற்­சங்க சம்­மே­ள­னத்தின் ஒன்­றி­ணைந்த குழு ஊடகப் பேச்­சாளர் கே.எல்.டீ.ஜீ. ரிஜ்மண்ட் தெரி­வித்­தி­ருந்தார்.

கடந்த இரு வாரங்­க­ளுக்கு மேலாக பல்­க­லைக்­க­ழ­கங்­களின் கல்­வி­சாரா ஊழி­யர்கள் தங்­க­ளுக்கு அதி­க­ரிக்­கப்­பட்ட 2,500 ரூபா கொடுப்­ப­னவை அடிப்­படை சம்­ப­ளத்­துடன் சேர்ப்­பது உள்­ளிட்ட 7 முக்­கி­ய­மான கோரிக்­கை­களை முன்­வைத்து கடந்த ஜூலை ­மாதம் 14ஆம் திக­தி­யி­லி­ருந்து ஆர்ப்­பாட்­டங்­க­ளிலும் தொழிற்­சங்க நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அத்­தோடு குறித்த பல்­க­லைக்­க­ழக கல்வி சாரா ஊழி­யர்கள் முன்­னெ­டுத்­துள்ள பணிப்­ப­கிஷ்­க­ரிப்­பினால் தங்­களின் கல்வி நட­வ­டிக்­கைகள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், பல்­க­லைக்­க­ழகங்­களின் நூல் நிலை­யங்கள் மூடப்­பட்­டி­ருந்­த­மை­யினால் மாண­வர்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் ஒன்­றியம் தெரிவித்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாட்டிலுள்ள பல பல்கலைக்கழகங்களிலும் நேற்றும் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *