Breaking
Sat. Apr 27th, 2024

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக மண்டபத்தில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக செயலாளர் கோபாலரட்ணம் தலைமையில் 17.01.2017 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

பட்டிருப்பு தொகுதிக்குட்பட்ட வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி , பட்டிபளை ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 194 விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலக செயலாளர் திருமதி தினேஷ், உதவித் திட்டப்பணிப்பாளர் பிரபாகரன், திருமதி ஏ. பாக்கியராஜா பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் ஆலோசகருமாகிய கணேசமூர்த்தி, பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் லோகநாதன், பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான கண்ணன், முஸ்தபா கலீல் முருக மூர்த்தி குருக்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.

16002903_1334990803229275_4262263079970126214_n 16105678_1334990909895931_1201869769885971420_n

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *