ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 69ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்தியப் பிரதமர் இடையே இன்று சந்திப்பு இடம்பெறவுள்ளது.அமெரிக்க நேரப்படி இன்று காலை 11.45 மணிக்கு இந்த இருதரப்புச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இரு நாட்டு அரசுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.சுமார் 30 நிமிடங்கள் வரை நடைபெறவுள்ள இச் சந்திப்பின்போது இலங்கை தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகப் பேசப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.