Breaking
Thu. May 2nd, 2024

ஏ.எஸ்.எம்.ஜாவித்

மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள்  (04) மாலை நீரில் மூழ்கி பலியானதாக அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற தபாலகர் ஏ.ஜி.எம். நௌபர் என்பவரின் புதல்வர்களான முஹமட் சிபான் (28), முஹமட் முபாஸ் (19) ஆகியோராவர்.
மாரணமான இரு கோதரர்களின் ஒரு சகோதரர் திருமனமாகி ஒரு வாரமான நிலையில் மேற்படிக் குடும்பத்தினர் சிலாவத்துறைப் பகுதிக்கு பொழுது போக்கிற்காகச் சென்ற சமயமே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இன்று (04) மாலை சுமார் 3.30 மணியளவில் அரிவியாத்துடன் இணையும் அரிப்புத்துறைப் பாலத்திற்கு அருகில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது நீரின் அடியில் பாரிய குழி இருந்தது தெரியாது ஒருவர் நீராடியபோது அவர் நீரில் மூழ்குவதைக் கண்ட மற்றய சகோதரர் அவரைக் காப்பாற்றுவதற்காக சென்ற சமயம் இருவரும் நீருக்கடியில் இருந்த குழிக்குள் புதையுண்டு இருவரும் மரணமானர் என அருகில் இருந்த மற்றய சகோதரரும், குடும்பத்தாரும் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக தளத்திற்கு வந்த கடற்படையினருடன் பொதுமக்களும் இணைந்து இருவரதும் சடலங்களை எடுத்ததுடன் முருங்கன் பொலிஸரின் உதவியுடன் சடலங்கள் மன்னார் பொது வைத்திய சாலைக்கு கொண்டு வரப்பட்டதுடன் மன்னார் மாவட்ட பதில் நீதவான் கயஸ் பெல்டானோவின் உத்ரவிற்கு அமைய விசாரணைகள் இடம் பெற்றதுடன் இரவு 10.00மணியளவில்  இருவரினதும் ஜனாஸாக்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு அவர்களின் தாரபுர இல்லத்தில் ஜனாஸாக்கள் வைக்கப்படுள்ளன.
முருங்கன் பொலிஸாருடன் மன்னார் நகர பொலிஸாரும் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர். கடந்த இரு வாரங்களுக்குள் குடும்பங்களோடு கடல் அனர்த்தத்திற்கு பலர் பலியான நிலையில் இன்றைய இந்தச் சம்பவமும் முழு மன்னார் மாவட்டத்தையுமே சோகமயமாக்கியுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *