பொது எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டத்தில் முனனாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கலந்து கொள்வார் என மஹிந்த ஆதரவு எம்.பி. வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
எமது அணியைச் சேர்ந்த எவரும் அரசுடன் இணையப் போவதில்லையென்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில்;
பொது எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டம் இம்முறை கிருலப்பனை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேதின ஊர்வலம் நாரஹேன்பிட்டி, சாலிகா மைதானத்திலிருந்து ஆரம்பமாகி கிருலப்பனை மைதானத்தை வந்தடைந்து மாலை 3.00 மணிக்கு பொதுக்கூட்டம் ஆரம்பமாகும்.
இதில் முன்னாள் ஜனாதிபதி உட்பட ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியை சேர்ந்த எமக்கு ஆதரவு வழங்கும் 30 க்கு மேற்பட்ட எம்.பி. க்கள் கலந்து கொள்வார்கள்.
இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பாக எமக்கு எதுவும் தெரியாது. அக்கட்சியினரே அதனை தீர்மானிக்க வேண்டும்.
எந்த விதமான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் அவர்கள் கலந்து கொள்வார்கள்.
அதேவேளை எமது அணிக்கு ஆதரவு வழங்கும் எம்.பி. க்கள் எவரும் அரசுடன் இணையப் போவதில்லை.
அரசுக்கு எதிரான எமது மக்கள் போராட்டம் தொடரும்.
இந்த ஆட்சி இனி இரண்டு வருடங்களேனும் தொடராது.
மக்களே வெளியேற்றும் நிலைமை ஏற்படும் என்றும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்துள்ளார்.