Breaking
Fri. May 17th, 2024

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலைவர் என்ற வகையில் ஜனா­தி­ப­தியின் நிபந்­த­னை­க­ளையோ கட்­சியின் கொள்­கை­க­ளையோ மீறி செயற்­படவில்லை. எனவே ஒழுக்­காற்று நட­வ­டிக்­கையை எதிர்கொள்­ளவும் எதிர்கால நட­வ­டிக்கை தொடர்பில் கலந்­து­ரை­யா­டவும் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் கூட்டு எதிர்க்கட்­சி யின் அனைத்து உறுப்­பி­னர்­களும் வெள்­ளிக்­கி­ழமை விசேட சந்­திப்பை நடத்த உள்­ளனர்.

ஆறு நாள் விஜ­யத்தை மேற்­கொண்டு தென்­கொ­ரியா சென்­றுள்ள மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான குழு நாளை வியா­ழக்­கி­ழமை நாடு திரும்­பு­கின்­றது. தென்­கொ­ரி­யாவில் வாழும் இலங்­கை­யர்­களை சந்­தித்து நாட்டில் தற்­போ­துள்ள நிலை­மைகள் தொடர்பில் பிர­சார கூட்­டங்­களில் கலந்துகொண்­ட­துடன் அந்­நாட்டு தலை­வர்­க­ளையும் இந்த குழு சந்­தித்­தி­ருந்­தது.

மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் உள்­ளிட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான டலஸ் அழ­கப்­பெ­ரும, பந்­துல குண­வர்­தன, மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே, லொஹான் ரத்­வத்த, பியல் நிஷாந்த மற்றும் செஹான் சேம­சிங்க ஆகியோர் தென் கொரி­யா­விற்கு சென்­றி­ருந்­தனர்.

கண்­டி­யி­லி­ருந்து கொழும்பை நோக்­கிய கூட்டு எதிர்க்கட்­சியின் பாத­யாத்­தி­ரையில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்கப் போவ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனை எதிர் கொள்ள கூட்டு எதிர்க் கட்­சி­யினர் தயா­ராக உள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திலும் அமு­னு­கம தெரி­வித்தார்.

நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை ஒரு போதும் நிறுத்தப்போவ­தில்லை. தேசிய மட்­டத்­திலும் மாகாண மற்றும் மாவட்ட மட்­டத்­திலும் மக்கள் போராட்­டங்­களை நடத்தி வலு­வான எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட உள்ளன. ஆகவே முக்கியமான சில தீர்மான ங்களை எடுப்பதற்காக மஹிந்த ராஜ­பக் ஷ தலைமையில் வார இறுதியில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *