Breaking
Tue. Apr 30th, 2024

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கவேலாயுதரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி கிராமத்தைச் சேர்ந்த 6  பிள்ளைகளின் தந்தையான மயில்வாகனம் தவபுத்திரன் (வயது 41)  என்பவரே உயிரிழந்துள்ளார்.

வயலில் வேலையை முடித்;துவிட்டு, குறித்த விவசாயி வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே மின்னல் தாக்கத்துக்கு உள்ளானார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *