Breaking
Thu. May 2nd, 2024

மியன்மார் முஸ்லிம்கள் சுமார் 800 முதல் 1000 வருடகால வரலாற்றைக் கொண்டவர்கள் . அவர்கள் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தற்போதும்முள்ளது .

ஆனால் அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதென்பது உண்மைதான் அதற்காக ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியன்மார் இனவாத அரசுடன் போராடவில்லை ஆனால் மியன்மார் அரசியல் இனவாதிகள் அவர்களின் உயிரைக் கொன்று வருவருகிறார்கள் .

அன்மையில் நாங்கள் face book இல் நாம் பார்த்து பரிமாரிய மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொடுமைப்படுத்துவது போன்ற photos கள் அனைத்தும் நேற்றோ , இன்றோ நடந்தவையல்ல என்று பல உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளது .
அப்படியென்றால் face book இல் பரப்பப்படும் தகவல்கள் எப்போது நிகழந்தது ?

இந்தத் தகவல்களைப் பொருத்தவரையில் 2012 இடம்பெற்ற கொடூரமான இனக்கலவரம் இதை வெளிக்காட்டுவதற்கு சரியான ஊடகங்கள் இல்லாததன் காரணமாக அந்தக் கொடூரக் கொலைகள் திட்டவட்டமாக மறைக்கப்பட்டது .

இதில் எடுக்கப்பட்ட photos கள்தான் இன்று சமூக வலைதளங்களில் பரிமாறப்படுகின்றது .

இதில் பலவகையா கட்டுக்கதைகள் சமூக வலைதளங்களில் பகிரப்பப்பட்டு வருகின்றது .

இன்றைய மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலை என்னவென்றால் மியன்மாரில் குடியுரிமை மறுக்கப்பட்டதால் அவர்களுக்கு வாழ்வுச் சுதந்திரம்மில்லை எனவே
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு வாழ்வதற்கு ஒரு நாடு தேவை , அதேபோல் அவர்களின் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் .

அவர்களின் உரிமைகள் பேனப்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் ”தாய்லாந்து ‘ மலேசியா ,இந்துநேசியா போன்ற நாடுகளில் சட்டவீரோதமாகக் குடியமர்வதற்கு சில இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து பயணிப்பதற்குத்தயாராகி கிட்டத்தட்ட 4500 பேர் கடலில் பயணித்துள்ளார்கள் இவர்களைக் அழைத்துச் சென்ற இடைத்தரகர்கள் மியன்மார் அரசியல் இனவாதிகளிடம் பணம் வாங்கி நடுக்கடலில்
அவர்களின் படகுகளுக்கு பெட்ரோல் ( petrol ) கொடுக்காமல் நடுக்கடலில் தத்தளிக்க வைத்துள்ளார்கள்.

இதிலிருந்த மக்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்குப் பெட்ரோல் ( petrol ) இல்லாமலும் , உண்பதற்கு உணவு இல்லாமலும் , உடுப்பதற்கு ஆடை இல்லாமலும் கடலில் தத்தளித்த ரோகிங்கியா முஸ்லிம்கள் உணவிற்கு சண்டை பிடித்து 100 பேர் பரிதாவமாகக் கொல்லப்பட்டார்கள் .

இதில் தப்பித்து சென்றவர்கள்தான் அன்மையில் இந்துநேசியா கடற்கரைக்குச் சென்றவர்கள் .

தற்போது மலேசிய ,இந்துநேசியா ,போன்ற முஸ்லிம் நாடுகள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு முன்வந்துள்ளது அல்ஹம்து லில்லாஹ் இப்போது அவர்களுக்கு இந்துநேசியாவில் தற்காலிக அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது .

குறிப்பு : இலங்கை முஸ்லிம்கள் என்ற வகையில் எங்களைச் சூழவும் பெரும்பான்மையான சமூகத்தினர் வாழ்கிறார்கள் கடந்த காலங்களில் எமக்கெதிராகவும் இனவாதச் சேல்கள் இடம்பெற்றதை நாங்கள் கண்ணூடாகக் கண்டோம் . தற்போது ஒரு இனப்பிரச்சினை சுமூகமான நிலைக்கு வந்துள்ளது .

தயவுசெய்து பெளத்தர்களின் கோபத்தைத் தூண்டும் வகையில் அவர்களின் கடவுளை இழிவுபடுத்தும் புகைப்படங்களை face book இல் பகிர வேண்டாம் .

இறைவன் திருமறையில் கூறுகின்றான் நீங்கள் பிறரின் கடவுள்களை ஏசாதீர்கள் அவர்கள் அறியாமல் உங்கள் இறைவனை ஏசக்கூடும் என்று கூறுகின்றான் .

எனவே தயவுசெய்து அவர்களின் மார்க்கத்தை இழிவுபடுத்தும் புகைப்படங்களை பகிர வேண்டாம் .

இறைவன் அனைவரினதும்  பாவங்களை மன்னிக்க வேண்டும் .

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *