Breaking
Sat. May 4th, 2024

பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கான அதி­க­ரிக்­கப்­பட்ட ரூபா 5000 மஹா­பொல புல­மைப்­ப­ரிசில் கொடுப்­ப­னவு எதிர்­வரும் மே மாதம் முதலாம் திக­தி­யி­லி­ருந்து வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார்.

நாட்டின் எதிர்­கா­லத்தை கருத்தில் கொண் டே மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலி திட்­டங்­களை முன்­னெ­டுத்­தா­ரென்றும் அமைச்சர் தெரி­வித்தார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முத­லியின் 22ஆவது சிரார்த்த தினத்தை முன்­னிட்டு நேற்று கொழும்பு றோயல் கல்­லூ­ரிக்கு முன்­பாகவுள்ள தூபி அருகில் நடைபெற்ற லலித் அத் து­லத்­மு­த­லியின் நினைவு தின கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் ரவிக்கரு­ணா­நா­யக்க இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் இங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

ஐக்­கிய தேசிய கட்­சியின் மேம்­பாட்­டுக்­கா­கவும் நாட்டின் நன்­மைக்­கா­கவும் எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்­கா­கவும் திட்­ட­மிட்டு செய­லாற்­றி­யவர் லலித் அத்து­லத்­மு­தலி அவரின் திட்­டங்­களால் உயர்வு தாழ்வு என்ற பாகு பாடில்­லாமல் திற­மை­யுள்ள மாண­வர்கள் அனை­வ­ருக்கும் பல்­க­லைக்­க­ழக கல்­வியை தொடர்­வற்கு மஹா­பொல புல­மைப்­ப­ரிசில் திட்டம் ஆரம்­பிக்­கப்­பட் ­டது. இவ்­வா­றான அர­சியல் தலை­வர்கள் அர­சி­ய­லுக்கு முன்­னு­தா­ர­ணர்கள்.

நிதி­ய­மைச்­ச­ராக பத­வி­யேற்­ற­வுடன் மஹா­பொல புல­மைப்­ப­ரிசில் தொகையை ரூபா 5000 ஆக அதி­க­ரிக்க கிடைத்­தமை நான் பெற்ற பாக்கியமாகும்.இவ் அதிகரிக்கப்பட்ட ரூபா 5000 எதிர் வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து வழங்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித் தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *