Breaking
Mon. Apr 29th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அம்பாரை மாவட்டத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து வருகின்றனர்.

நேற்று சனிக்கிழமை மாலை அட்டாளைச்சேனைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.சீ.எம் சமீர் ஹாஜி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகவும், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி கௌரவ அதிதியாகவும், விசேட அதிதிகளாக புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் நவவி, அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர் இஷ்ஹாக் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

rr5.jpg2_5 rr1.jpg2_1.jpg3_1.jpg4_1 rr2.jpg2_2.jpg3_2 rr8 (1)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *