Breaking
Sun. May 19th, 2024

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகரவிற்கு பிணை வழங்கப்பட்டள்ளது.

7,900 ரூபாய் காசுப் பிணை மற்றும் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான சரீரப் பிணையில் விடுவிக்க, கோட்டை நீதவான் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றக் கட்டளையையும் மீறி, பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டிலேயே, அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த வழக்கு விசாரணையானது எதிர்மாவரும் மாதம் 5ஆம் திகதி இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *