Breaking
Mon. Apr 29th, 2024
‍- இஸ்ஸதீன் றிழ்வான்-
இலங்கை மற்றும் உலக நாடுகளிலிருந்துகொண்டு சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் அவலங்களில் போது குரம்கொடுத்த பலர் இன்று மெளனித்துவிட்டனர் மரிச்சிக்கட்டி விடயத்தில்.
பலஸ்தீனம் நமது 2வது கிப்லா உண்மைதான், அதனை யூதர்களிடத்திலிருந்து பாதுகாப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திக்கவேண்டும், குரல்கொடுக்கவேண்டும்.
அதுபோல்,
மரிச்சிக்கட்டி என்பது 100 வீதம் முஸ்லிம்கள் செரிந்து வாழ்ந்த வரலாற்று பூமி.
நீண்ட நாள் பேசி தீர்ப்பதற்கோ, பெரிய போராட்டங்கள் செய்து உறுதிப்படுத்துவதற்கோ அல்லது வழக்காடி நிரூபிப்பதற்கோ தேவையற்ற ஆதாரங்கள் நிறைந்த பூமி தீர்வற்றுகிடக்கின்றது. அரசியல் மற்றும் இனவாதம் இதில் கலந்திருப்பதனால்.
பழமைவாந்த இந்த முஸ்லீம் கிராமத்தின் மீள்குடியேற்றத்திற்கு நாடு பூராவும் பரந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் குரல்கொடுக்கவேண்டும் என தயவாய் வேண்டுகிறேன்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *