Breaking
Mon. May 6th, 2024

க.பொ.த. உயர்­தர பரீட்சை மத்திய நிலை­யத்தில் தொழில்நுட்பவியல் பாடத்­திற்கு தோற்­றிய 11 மாணவர்களுக்கு இரண்டு மணித்­தி­யா­லங்கள் தாம­தித்து வினாப்­பத்­தி­ரம் ஒன்று வழங்­கி­யமை தொடர்­பாக 11 மாண­வர்கள் வத்­து­காமம் பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

வத்­து­காமம் கல்வி வல­யத்­தி­லுள்ள கண்டி, வலல மத்­திய கல்­லூ­ரியில் அமைக்­கப்­பட்­டுள்ள க.பொ.த. உயர்­தர பரீட்சை மத்­திய நிலை­யத்தில் ஒரு அறையில் பரீட்­சைக்கு சனிக்­கி­ழமை தொழில்­நுட்­ப­வியல் பாடத்­திற்கு தேற்­றிய 11 மாண­வர்­க­ளுக்கு இக்­கேள்விப் பத்­தி­ரத்தின் இரண்டாம் பகு­தியை இரண்டு மணித்­தி­யா­லங்கள் தாம­தித்து வழங்­கி­யது தொடர்­பாக 11 மாண­வர்கள் வத்­து­காமம் பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

12 மணி முதல் 3.30 மணி வரை இப்­பாடம் இடம்­பெற்­றுள்­ள­துடன் பரீட்சை நிலை­யத்தின் ஒரு அறையில் பரீட்­சைக்கு தோற்­றிய 11 மாண­வர்­க­ளுக்கு தொழில் நுட்­ப­வியல் பாடத்தின் முதலாம் கேள்விப் பத்­தி­ரத்தை குறித்த நேரத்தில் வழங்­கி­யுள்ள போதும் இரண்டாம் பகு­தியை இரண்டு மணித்­தி­யா­லங்கள் தாம­தித்தே வழங்­கி­யுள்­ளனர். அதுவும் மாணவர் ஒருவர் வின­விய சந்­தே­கத்தின் பின்பே அது வழங்­கப்­பட்­டுள்­ளது.

இவ் வினாப்­பத்­திரம் தாம­த­மாக வழங்­கப்­பட்­ட­தனால் விடை­ய­ளிப்­ப­தற்கு மேல­திக காலம் வழங்­கப்­பட்ட போதும் அதனால் தமக்கு அநீதி ஏற்­பட்­டுள்­ள­தாகக் கூறி 11 மாண­வர்­களும் வத்­து­காமம் பொலிஸில் முறைப்­பாடு ஒன்றை செய்­துள்­ளனர்.

இது தொடர்­பான முறைப்­பாட்டை பதிவு செய்­துள்ள பொலிஸார் கல்வித் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கு இது தொடர்கில் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *