2015 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே மேற்கண்ட முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதன்படி வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் மீதான இரண்டாம் வாசிப்பு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி முதல் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நவம்பர் 18ஆம் திகதி வரை நடைபெறும்.
பின்னர் வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நவம்பர் மாதம் 19ஆம் திகதி மாலை 06.00 மணிக்கு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.