கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான தபால் புகையிரத சேவை 24 வருடங்களின் பின்னர் இன்று காலை 7.25 மணியளவில் யாழ். பிரதான புகையித நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்த சேவையினை கொண்டாடும் முகமாக தற்பொழுது யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து தபால் பொதிகள் யாழ். பிரதான தபாலகத்திற்கு வீதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றது.