Breaking
Mon. May 20th, 2024

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த சீனாவின் உப வெளி­வி­வ­கார அமைச்சர் லீ சென்மின் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க்ஷவை கொழும்பில் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இந்த சந்­திப்பு ஒரு வழ­மை­யான சந்­திப்பு என முன்னாள் ஜனா­தி­ப­தியின் ஊடகப் பேச்­சாளர் தெரி­வித்­துள்­ள­தாக ‘தென் சீனா மோனிங் போஸ்ட்’ செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­பக்ஷ அதி­காரம் இழந்­ததன் பின்னர் சீனத் தலைவர் ஒருவர் முதல் தட­வை­யாக அவரை சந்­தித்­துள்­ளமை விசேட அம்­ச­மாகும்.

இலங்­கைக்கும் சீனா­வுக்­கு­மி­டை­யி­லான உறவை வலுப்­ப­டுத்தும் நோக்கில் இலங்­கைக்­கான விசேட பிர­தி­நி­தி­யா­கவே அந்­நாட்டின் உப வெளி­வி­வ­கார அமைச்சர் இலங்­கைக்­கான விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்தார்.

இலங்கைப் பய­ணத்தை முடித்­துக்­கொண்டு சீனா திரும்­பு­வ­தற்கு முன்­ப­தாக செய்­தி­யாளர் சந்­திப்பை நடத்­தி­யி­ருந்த லீ சென்மின் இலங்கை விஜ­ய­மா­னது வெற்­றி­க­ர­மான விஜ­ய­மாக அமைந்­த­தாக கூறி­யி­ருந்தார். ஜனா­தி­பதி, பிர­தமர், உள்­ளிட்ட பல தரப்­புக்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தாக கூறி­யி­ருந்த சீன உப வெளிவிவகார அமைச்சர் மஹிந்த ராஜபக் ஷவுடனான சந்திப்பு குறித்து எதுவும் கூறவில்லை என் பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *