வரவு செலவுத்திட்டத்தில் புதிதாக சாலை வரி அறிமுகம்!
எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக புதிதாக சாலை வரியொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் வாகனப் பாவனையாளர்கள் வருடந்தோறும் சாலை வரியொன்றை அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும். அதனைக் கொண்டு நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றும். இதனை முன்னுதாரணமாகக் கொண்டு
மத்தல விமானநிலையத்தில் ஒருவர் கைது
– K.Kapila – இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டு செல்ல முயன்ற நபரை மத்தல விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 6 கோடியே 60 இலட்சத்து 76 ஆயிரம் ரூபா பெறுமதியான
பல மாதங்களுக்கு பிறகு வெளியே வந்தார் ஓமன் மன்னர்
ஓமன் மன்னர் கபூஸ் (வயது 74). 1970-ம் ஆண்டு முதல் ஆட்சிப்பொறுப்பில் உள்ள மன்னர் கபூஸ், உடல் நலக்குறைவு காரணமாக நீண்டகாலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். 8 மாதங்கள் அவர் ஜெர்மனி நாட்டில் தங்கி சிகிச்சை பெற்று
மரக்கறிகளின் விலை மலைபோல் உயர்வு
– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக மரக்கறிகள் உட்பட உணவுப் பொருட்களின் விலைகள் மலையளவு அதிகரித்துள்ளன. 150 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ பச்சை மிளகாய் 1200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. 100 ரூபாய் முதல் 150
12 மணி நேர நீர்வெட்டு
– எம்.ஆர்.எம்.வஸீம் – அத்தியாவசிய நடவடிக்கை காரணமாக நாளை 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8மணி முதல் இரவு 8மணி வரையான 12மணி நேர நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது. மொரட்டுவை மாநகர சபை பிரதேசம்,இரத்மலானை,சொய்சாபுர,பாணந்துறை,
சேயா செதவ்மி படுகொலை: சமன் ஜயலத்துக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சமன் ஜயலத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதில் இன்று
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் தனது பதிலை வழங்கவுள்ள நிலையில் உண்ணாவிரதமிருக்கும் கைதி கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பலத்த எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் இருக்கின்றனர். நீண்டகாலமாக நாடளாவிய ரீதியில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை
பரபரப்பான சூழ்நிலையில் ஒபாமா – புதின் திடீர் சந்திப்பு
ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக துருக்கி நாட்டுக்கு வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ரஷ்ய அதிபர் புதினும் திடீரென சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்கள். கடந்த மாதம் சிரியாவில் ஐ.எஸ். களுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது முதல் அமெரிக்கவிற்கும் ரஷ்யாவிற்குமான உறவில்
முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் அதிரடி தாக்குதல்
சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் அதிரடி தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 14-ம் தேதி நள்ளிரவு பாரிஸில் உள்ள கலையரங்கம், உணவு விடுதி, கால்பந்து மைதானத்தை ஒட்டிய பகுதி என ஆறு இடங்களில்
பிரான்ஸ் கால்பந்து மைதானத்தில் 80000 ரசிகர்களை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞன்
பிரான்ஸில் நடை பெற்றுள்ள குண்டு வெடிப்பும் துப்பாக்கி சூடும் பிரான்ஸை மட்டும் இன்றி உலகயே உலுக்கியிருக்கிறது. மனிதாபிமானம் உள்ள அனைத்து தலைவர்களும் மனிதர்களும் இந்த கொடுஞ்செயலை கண்டித்துள்ளனர். குறிப்பாக இஸ்லாத்திற்கும் இந்த தாக்குதலுக்கும் எந்த தொடர்ப்பும் இல்லை என்பதையும் இந்த செயலில் இறங்கியதாக
கிழக்கு முதலமைச்சரின் அநாகரிகங்களுக்கு முடிவுகட்டவுள்ளோம் – அமீர் அலி
– ஏ.எச்.ஏ. ஹுஸைன் – கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்து கொண்டு இந்த நல்லாட்சிக் காலத்தில் குறுநில மன்னர்போல் அராஜக ஆட்சி நடத்துகின்ற முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுக்கெதிராக நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணை கொண்டு வரத்