Breaking
Fri. Dec 5th, 2025

-ஊடகப்பிரிவு- 

மன்னார், தாராபுரம் வட்டாரத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எச்.உவைஸ் அவர்களை ஆதரித்து, புத்தளம் அல் காஸிமி சிட்டியில் நேற்று (07) கூட்டமொன்று இடம்பெற்றது.

இளைஞர்களின் ஏற்பாட்டில்  நடைபெற்ற இந்நிகழ்வில், வேட்பாளரின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டதுடன், சமகால அரசியல் நகர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளிபரிபாலன சபை உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் மக்கள் காங்கிரஸின்  ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்

 

 

 

Related Post