சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான உதவித் தொகை வழங்கல்!

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்குரிய (215 திவுல்வெவ கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட) முக்கிரியாவ கிராமத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான உதவித் தொகை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது, சிறுநீரக நோயினால் பாதிப்புற்ற 16 பேருக்கான உதவித் தொகை பா.உ இஷாக் ரஹ்மான் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.