Breaking
Fri. Dec 5th, 2025

அக்குறனை பிரதேச சபைக்கு உற்பட்ட தெலும்புகஹவத்த வட்டாரத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய உத்தியோகபூர்வ நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

மக்கள் வாக்குகளினால் அக்குறனை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அல்ஜாஜ் நஸார் அவர்கள் வட்டாரத்தின் அமைப்பாளராக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டார்.

மேலும் ஏனைய உறுப்பினர்களும் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டனர். தேசிய தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் இணைப்பு செயலாளர் ரியாஸ் இஸ்ஸதீன் அவர்களும், மாவட்ட அமைப்பாளர், ஹம்ஜாட் ஹாஜியார் அவர்களும் இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.அத்தோடு அக்குரனை மத்திய குழுவின் தலைவர் I M இல்லியாஸ் மற்று மத்திய குழு உறுப்பினர்களான றியாஸ் மற்றும் ஸப்ரான் ஆகியோரும் இந்நிகழ்விற்கு சமுகமளித்திருத்தனர்.

Related Post