Breaking
Fri. Dec 5th, 2025

அ/கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2019.01.31 அன்று நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டு விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டிய சில மாணவர்களுக்கு கிண்ணங்களையும், சான்றிதல்களையும் வழங்கி வைத்தார்.

இதன்போது குறித்த பாடசாலையில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சுற்று மதிலும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா இறம்பைக்குளம் பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி, பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி எஸ் ஜெயநாயகி தலைமையில் நேற்று (31/01/2019) நடைபெற்றது இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்கினார்.இந்த நிகழ்வில் கல்வி அதிகாரிகள் அரசியல் முக்கியஸ்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்….

ஊடகப்பிரிவு –

Related Post