Breaking
Fri. Dec 5th, 2025

41 வது, 42 வது வேலைத்திட்டங்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில்,  நகரசபை உறுப்பினர்களான நிசார்டீன், ஹாரிஸ், வட்டாரக்குழுத் தலைவர் ஹனீபா ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, கிண்ணியா பிரதேசத்துக்கான அபிவிருத்திப் பணிகள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

41 வது வேலைத்திட்டம் – பெரியற்றுமுனை, கடற்கரை வீதி, 01 மில்லியன் ரூபாவிலும்

42 வது வேலைத்திட்டம் – தி/கிண்ணியா அல் அதான் வித்தியாலய வீதி, 01 மில்லியன் ரூபாவிலும் கொங்ரீட் வீதிகளாக புனரமைக்கும் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், கிண்ணியா நகரசபை உறுப்பினர்களான ஹாரிஸ், நிசார்டீன், கலிபத்துல்லா மற்றும் வட்டாரக் குழுத்தலைவர் ஹனிபா GS உட்பட பிரதேச பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

Related Post