Breaking
Sun. Dec 7th, 2025

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கெவிளியாமடு மற்றும் மங்களகம பகுதிக்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் மூலம் குழாய் கிணறு மற்றும் பாடசாலை சுற்றுமதில் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெவிளியாமடு பகுதியில் அமைக்கப்பட்ட குழாய் கிணறை மக்கள் பாவனைக்கு கையளிப்பட்டதுடன், மங்களகம மகா வித்தியாலயத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான வேலைகளும் ஆரம்பித்து வைத்தார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் மூலம் குழாய் கிணறு அமைப்பதற்கு ஐந்து இலட்சம் ரூபாவும், சுற்றுமதில் அமைப்பதற்கு நான்கு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி வைக்கப்பட்டது.

மங்களகம மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடி போது மாணவர்கள் பாடசாலையில் நிலவும் குடிநீர் பிரச்சனையை பிரதியமைச்சரிடம் தெரிவித்தையடுத்து பிரதியமைச்சர் குடிநீர் பிரச்சனையை விரைவில் தீர்வு வைப்பதாகவும் உறுதியளித்ததுடன் கெவிளியாமடு மற்றும் மங்களகம கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக நேரில் சென்று மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

Related Post