Breaking
Mon. Dec 15th, 2025

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு நாளை மறு­தினம் வெள்ளிக்­கி­ழமை இலங்கை வரு­கின்றார். இலங்­கையின் மிக நெருங்கிய அயல் நாடான இந்­தி­யாவின் பிர­தமர் ஒருவர் 28 வரு­டங்­க­ளுக்கு பின்னர் உத்­தி­யோக­பூர்வ அரச விஜ­யத்தை மேற்­கொண்டு இலங்கை வரு­கின்­றமை மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த விட­ய­மாக கரு­தப்­ப­டு­கின்­றது.

இந்­திய பிர­த­மரின் இலங்கை விஜ­யத்­தின்­போது பல்­வேறு முக்­கி­ய­மான விட­யங்கள் இடம்­பெ­ற­வுள்­ள­துடன் பல உடன்­ப­டிக்­கை­களும் இரண்டு நாடு­க­ளுக்கு இடையில் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளன.

மேலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க,எதிர்க்­கட்சித் தலைவர் நிமால் சிறி­பால டி. சில்வா, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் ,சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் பிர­தி­நி­திகள் , அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் பிர­தி­நி­திகள், இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வர்கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார்.

சந்­தி­ரி­கா­வுடன் சந்­திப்பு
அதன் பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வுடன் கொழும்பில் இந்­திய பிர­தமர் பேச்­சு­வார்த்தை நடத்­துவார். இதன்­போது பல விட­யங்கள் குறித்து பேச்சு நடத்­தப்­படும். எனினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை சந்­திப்­பாரா இல்­லையா என்­பது குறித்து இது­வரை உறு­தி­ப­டுத்­தப்­ப­ட­வில்லை்.

வௌ்ளிக்­கி­ழமை தினத்தில் இறுதி நிகழ்­வாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இரவு விருந்­து­ப­சாரம் நடை­பெறும். அதில் பிர­தமர் மோடி கலந்­து­கொள்வார். அத்­துடன் முதல்நாள் நிகழ்­வுகள் முடி­வ­டையும்.

Related Post