Breaking
Sat. Dec 6th, 2025

இரா­ணுவ ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் இறுதி சந்­தர்ப்பம் தற்போது வந்துள்ளது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்­பிக்க ரண­வக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்கள் யாரை ஆத­ரிக்க வேண்டும் என்­பது அவர்­களின் விரும்பம். அதற்­காக தமி­ழர்­களை வற்­பு­றுத்த வேண்டாம்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்டி இருப்­பது வழ­மை­யா­னது. ஆனால் ஆட்­சி­யினை விரும்­பு­வதும் யார் ஆட்­சிக்கு வர வேண்டும் என்­பதை தெரிவு செய்­வதும் பொது­ மக்­களேயாவர்.

ஆனால் தற்­போது மக்­களின் விருப்­பத்­தினை மீறி ஒரு சிலரின் விருப்­பத்­திற்­காக தேர்தல் வெற்றி தீர்­மா­னிக்­கப்­ப­டு­கின்­றது. அதற்­காக அர­ச ஊழி­யர்­க­ளையும் ,உட­மை­க­ளையும் அரச ஊட­கங்­க­ளையும் பயன்­ப­டுத்­து­கின்­றனர்.

இத­னையும் தாண்டி தற்­போது இரா­ணுவ பரப்புரையினையும் அரசு ஆரம்­பித்து விட்­டது. எதி­ர­ணியின் கூட்­டங்­க­ளிற்கும் செய்­தி­யாளர் சந்­திப்­புக்­க­ளுக்கும் புல­னாய்வு பிரிவு அனுப்­பி வைக்கப்படுகின்றது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மக்கள் யாரை ஆத­ரிக்க வேண்டும் என்­பது இரா­ணு­வத்­தினால் கட்­டா­யப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. இரா­ணுவ ஆட்­சி­யினை நோக்­கிய பய­ணத்­திற்­கான சமிக்கை­யினை அர­சு காட்­டு­கின்­றது.

மக்­க­ளுக்கு ஜன­நா­ய­கத்­தி­னையும் நல்­லாட்­சி­யி­னையும் பெற்­றுக்­கொள்ளும் இறுதி சந்­தர்ப்பம் தற்­போது அமைந்­துள்­ளது. இதனை தவற விட வேண்டாம்.

இதுவே நாட்டின் பாதை­யினை தீர்­மா­னிக்கும் இறுதி சந்­தர்ப்­ப­மென்­ப­தனை மக்கள் மறந்து விட வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்இ முஸ்லிம் சமூ­கத்­திற்கு அவ­சி­ய­மான தேர்தல் அல்­லது சிங்­கள மக்­க­ளுக்கு அவ­சி­ய­மான தேர்தல் என பிரித்து ஒப்­பி­டாது.

அனை­வரும் தேசிய பிரச்­சி­னை­யா­கவும் ஒட்டு மொத்த மக்­களின் விடு­த­லை­யா­கவும் எண்ணி இந்த தேர்­தலை பயன்­ப­டுத்த வேண்டும்.

அதற்­காக தமிழ் மக்­களை வற்­பு­றுத்தி தேர்­தலில் யாரை ஆத­ரிக்க வேண்டும் என எவரும் செயற்­பட அவ­சி­ய­மில்லை.

இலங்­கையில் ஜனா­தி­பதி ஒரு­வரை தெரிவு செய்­வதில் தமிழ் மக்­க­ளுக்கு அக்­க­றை­யில்லை. அவர்கள் எதிர்­பார்ப்­பது தனித் தமி­ழீழம் என்­ப­தையே விடு­தலைப் புலிகள் முன்­வைத்­தனர்.

இத­னாலேயே 2005 ஆம் ஆண்டுத் தேர்­தலில் வடக்கு கிழக்கின் தமிழ் வாக்­குகள் விடு­தலைப் புலி­க­ளினால் தடுக்­கப்­பட்­டன.

ஆனால் இன்று நிலைமை மாற்­ற­ம­டைந்து விட்­டது. இன்று விடு­தலைப் புலிகள் அழிந்து விட்­டனர். ஆகையால் இன்று எவரும் வியா­பாரம் பேசி வாக்­கு­களை மாற்ற முடி­யாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Post