Breaking
Sun. Dec 7th, 2025

-ஊடகப்பிரிவு-

தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தலை மன்னார் கிராமத்தில் அமைக்கப்பட்ட உதயம் பனம் பொருள் உற்பத்தி அமைப்பிற்கான கட்டிடத் திறப்பு விழாவில், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் சிறப்பு அதிதியாகப் பங்கேற்றார்.

தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் செயலாளரினால் விடுக்கப்பட்ட விசேட அழைப்பின் பேரிலேயே, தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில், தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் பிரதேச சபை செயலாளர் பரமசோதி, மன்னார் பிரதேச சபை உறுப்பினர் நயீம் மற்றும் புனிதாவதி ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

Related Post