Breaking
Fri. Dec 5th, 2025

ஊழல் இல்லாத முதல் மாநிலமாக டெல்லியை மாற்ற அம்மாநில துணை முதல்வர் மனீஷ் சிசொரியா பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

ஆம் ஆத்மி டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட இரண்டு முறையும், டெல்லியை ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று தேர்தல் வாக்குறிதியை அளித்தே தேர்தலில் வெற்றிப் பெற்றது. அதன் படி சில அரசு அதிகாரிகளின் பதவிகூட ஊழல் குற்றச்சாட்டால் பறிபோனது. ஊழல் குறித்த புகார் தெரிவிக்க தனி தொலைப்பேசிப் புகார் எண்கள் மக்களுக்கு பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் இன்று டெல்லி மாநில முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் டெல்லியைநாட்டின் ஊழல் இல்லாத முதல் மாநிலமாக மாற்ற ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மனீஷ் சிசொரியா பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Post