எருக்கலம்பிட்டி வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு!

மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட எருக்கலம்பிட்டி கிராமத்திற்கு வீடமைப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட  வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (05) எருக்கலம்பிட்டியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், பிரதித் தவிசாளர் இஸ்ஸதீன், பிரதேச சபை உறுப்பினர் மஹீசா உட்பட மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

(ஐ)