Breaking
Sat. Dec 6th, 2025

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா, பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், பிணை கேட்டு, ஜெயலலிதா தரப்பில், கர்நாடகா உயர் நீதிமன்றில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று கூடிய சிறப்பு அமர்வு, இந்த மனு மீது விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணையை வரும் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் கால அவகாசம் கேட்டதால், விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Post