Breaking
Fri. Dec 5th, 2025
– ஹாசிம் ஹம்ஸா –
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தியின் விஷேட சொற்பொழிவொன்று கத்தாரில் நடைபெறவுள்ளது.
“நமது கடந்த கால அனுபவங்களும் தாயகத்திற்கான எங்கள் பங்களிப்பும்” எனும் கருப்பொருளில் நடைபெறவுள்ள இவ்விஷேட சொற்பொழிவுக்கு இலங்கையர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றனர் சம் சம் பெளண்டேஷன் ஏற்பாட்டு குழுவினர்.
அப்துல்லாஹ் பின் ஸைத் அல்-மஹ்மூத் இஸ்லாமிய கலாசார மைய கேட்போர் கூடத்தில் (FANAAR) வரும் வெள்ளிக்கிழமை (09-10-2015) இரவு 7.30 மணி தொடக்கம் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பெண்களுக்கான பிரத்தியோக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post