Breaking
Sat. Dec 6th, 2025

குருநாகல் மாவட்டத்தின் கல்கமுவ, ஜாகம பகுதி மக்களுடனான மக்கள் சந்திப்பும், அபிவிருத்திகள் பற்றிய கலந்துரையாடலும் ஜாகம முஸ்லிம் வித்தியாலய அதிபர் பர்ஸானின் ஏற்ப்பாட்டில், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான எம்.என்.நஸீர் தலைமையில் நடைபெற்றது.

கடந்த புதன்கிழமை (29) இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது, ஜாகம பிரதேச அபிவிருத்தி, கல்வி, சங்கங்கள், சுயதொழில், கைத்தொழில் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இந்த நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடிய பிரதேச சபை பிரதித் தவிசாளர் எம்.சி.இர்பான், பிரதேசசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ஸபீர், கல்கமுவ பிரதேச சபை அமைப்பாளர் அல்-ஹாஜ் பத்ர் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், ஜாகம பள்ளி நிர்வாகிகள் உட்பட ஊர்மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Post