Breaking
Sat. Dec 6th, 2025

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், கல்கமுவ, வழுபாலுவெ ஜும்ஆ பள்ளிவாசலில் மேல்மாடிக் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான பணிகள் அண்மையில் ஆராம்பித்து வைக்கப்பட்டன.

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீரின் பங்களிப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தக் கட்டிடப் பணிக்காக, சுமாார் 60,00 000 ரூபா நிதி அமைச்சரினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் அமால்தீன், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், பள்ளி நிர்வாகசபை உறுப்பினர்கள் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.

 

 

 

 

 

 

 

Related Post