Breaking
Sat. Dec 6th, 2025

-ஊடகப்பிரிவு-

குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, இன்று மாலை (07) கெகுணகொல்லையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.என்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Post