Breaking
Fri. Dec 5th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தலைமையிலான குழுவினருக்கும் கல்முனை நகர ஜூம்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினருக்கும் இடையிலான சினேகபூர்வ சந்திப்பும், துஆ பிரார்த்தனையும் நேற்று முன்தினம் (04) பள்ளிவாயலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்தி சார் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் அதற்கான தீர்வும் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாகவும் நிர்வாகத்தினரால் தெளிவாக விளக்கப்பட்டது.

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை வேட்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலீலுர் ரஹ்மான் உட்பட உலமாக்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருப்பதை காணலாம்

y.jpg2_

Related Post