Breaking
Sat. Dec 6th, 2025

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விஷேட நிதியொதுக்கீட்டில், முல்லைத்தீவு, தண்ணீரூற்று முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (12) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், வடமாகாண சபை உறுப்பினர் ஜனோபர், பிரதேச சபை தவிசாளர்களான முஜாஹிர், நந்தன் மற்றும் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

(ன)

Related Post