Breaking
Mon. Dec 8th, 2025

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் இரண்டு கல்லூரி மாணவிகள் மீது அமிலம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமங்கலத்தில் உள்ள சின்ன பூலாம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த மீனா, அங்காள ஈஸ்வரி ஆகிய மாணவிகள் இரண்டு பேரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் படித்துவந்தனர்.

நேற்று அவர்கள் கல்லூரியிலிருந்து வேறு சில மாணவிகளுடன் சேர்ந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இந்த இரண்டு மாணவிகள் மீதும் அமிலத்தை வீசிவிட்டு ஓடியுள்ளார்.

இந்த அமில வீச்சில் மீனா என்ற மாணவிக்கு 25-30 சதவீத காயமும் அங்காள பரமேஸ்வரி என்ற மாணவிக்கு 13-15 சதவீத காயமும் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நடந்தபோது உடன் இருந்த மாணவி, முன்பின் தெரியாத நபர் அருகில் வந்து அமிலத்தை வீசியதாகத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவரும் உடனடியாக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு இருவரும் தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Related Post