Breaking
Sat. Dec 6th, 2025

தலைமன்னார் பியரில் இன்று அதிகாலை (19) வீடொன்று எரிந்து முற்றாக சேதமடைந்ததுள்ளது. சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்ட மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான முதற்கட்ட நடவடிக்கையினை உடன் செய்து கொடுத்தார்.

அத்துடன், இந்த தீ விபத்தில் சுமார் 25 இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் முற்றாக சேதமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும்,  இது தொடர்பாக நஷ்டஈடு பெற்றுக்கொடுக்க அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படுமெனவும் தவிசாளர் தெரிவித்தார்

இதேவேளை, தவிசாளர் முஜாஹிர் அவர்களோடு மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களான  நயீம், புனிதா, டிப்னா, தலைமன்னார் பிரதேச இணைப்பாளர் முஸம்மில் ஆகியோரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

(ன)


Related Post