தவ்ஹீத் ஜமாத் தனித்து ஜும்ஆ நடத்த முடியும்: கல்முனை நீதவான்

ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தனித்து ஜும்ஆவினை நடத்த முடியும் என கல்முனை நீதவான் இன்று உத்தரவிட்டார்.

ஜமாதின் நற்பிட்டிமுனை கிளையினால் நடத்தப்பட்டு வரும் ஜும்ஆ தொழுகையை நிறுத்தக் கோரி கல்முனை நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

கல்முனை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  ஜும்ஆ நடத்துவதற்க்கு யாருக்கும் தடை விதிக்கும் அதிகாரம் இல்லை எனக் கூறியே இந்த மனுவினை நீதவான தள்ளுபடி செய்யதார்.

-தவ்ஹீத் ஜமாத் ஊடகப் பிரிவு-