Breaking
Fri. Dec 5th, 2025

திவுரும்பொல மனாருல் ஹூதா அரபுக் கல்லூரிக்கான வரவேற்பு மண்டப வேலைகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் நடைபெற்று வருகின்றது.

கட்டிட வேலைகளை முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித்தலைவரும், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம். நஸீர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
இதன்போது, பிங்கிரிய தேர்தல் தொகுதி அமைப்பாளர் அப்துல்லாஹ், மனாருல் ஹூதா அரபுக்கல்லூரியின் அதிபர், குருநாகல் மாவட்ட கல்விப் பொறுப்பாளர் றியாஸ் (அzஸ்ஹரி) ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.

Related Post