Breaking
Mon. Dec 8th, 2025

நிந்தவூரில் செயற்படும் மாட்டு வண்டில் உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை (08) தவிசாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, மாட்டு வண்டில் உரிமையாளர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களது வாழ்வாதார முன்னேற்றம் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-முர்ஷித்-

 

 

Related Post