Breaking
Fri. Dec 5th, 2025

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சர் கெளரவ அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட விசேட தேவையுடையோர்களுக்கான சங்கங்களுக்கு போட்டோ கொப்பி இயந்திரங்கள் வழங்கள் மற்றும் பைசல் நகர் CTB தக்கியா மஸ்ஜித்கான ஒலி பெருக்கி உபகரணங்கள் வழங்கள் நிகழ்வானது 07.01.2019.இன்று கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் DR.ஹில்மி முகைதீன் பாவா அவர்களினால் அவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் A.H.M.கனி மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் A.S.M.றியாத் இணைப்புச் செயலாளர் E.L.அனீஸ் மற்றும் கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் M.T.A.ஹாரிஸ் போன்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Post