புதிய தேர்தல் முறைமை ஒன்று அறிமுகம் செய்த உடனேயே அந்த முறைமையின் கீழ் தேர்தல் நடத்துவது ஜனநாயகமாகாது.
புதிய தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டால் அது குறித்து மக்களை தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் ஒராண்டு காலமேனும் தேவைப்படும்.
புதிய தேர்தல் முறைமை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டால் அது குறித்து ஆராய்வதற்கு குறைந்த பட்சம் ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
புதிய தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டால் அதனை அமுல்படுத்த எமது திணைக்களம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

