Breaking
Fri. Dec 5th, 2025

புத்தளம் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கெமராக்களினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இலங்கை பொலிஸ் தலைமை அதிகாரி பூஜித அவர்களின் தலைமையில் இன்று இடம் பெற்றது.

இந்நிகழ்வில் புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்ட்டர் அபுஹாமி, நகர சபைத்தலைவர் பாயிஸ்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா உட்பட பல முக்கியஸ்த்தர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தள மாவட்ட அமைப்பாளரும் நகர சபை உறுப்பினருமான அலி சப்ரி ரஹீம் அவர்களின் சொந்த நிதியில் பாதுகாப்பு கெமராக்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Post