Breaking
Fri. Dec 5th, 2025

-ஊடகப்பிரிவு-

பேருவளை பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தர்காநகரில் நேற்று முன்தினம் (04) நடைபெற்ற கூட்டத்தில். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

பேருவளை பிரதேச சபைக்குட்பட்ட அளுத்கம வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் சமீரை ஆதரித்து சீனவத்தையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரதியமைச்சர், வெலிபிட்டி வட்டார வேட்பாளர் ஹஷீப் மரைக்காரை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அத்துடன், வெலிப்பிட்டி வட்டார வேட்பாளர் ஹஷீப் மரைக்காரின் தேர்தல் காரியாலயத்தையும் பிரதியமைச்சர் அமீர் அலி திறந்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related Post