Breaking
Sat. Dec 6th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், சிறந்த நகரம் மற்றும் பிரதேசங்களை உருவாக்கும் நோக்கில், மக்கள் காங்கிரஸின் வடக்கு – கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு, மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான், சர்வோதய நிலையத்தில் இன்று (29) இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான அமீர் அலி, கட்சியின் தேசிய அமைப்பாளரும், திருமலை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் கட்சியின் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளரகள், பிரதித் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

(ன)

 

Related Post