Breaking
Fri. Dec 5th, 2025

-ஊடகப்பிரிவு-

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  திருகோணமலை மாவட்டத்தின், மூதூர் பிரதேச சபையில்,   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மூதூரில் இன்று (08) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், பிரதியமைச்சர் அமீர் அலி, இஷாக் ரஹ்மான் எம்.பி, பிரதித் தலைவர் ஜமீல், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜவாத், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

Related Post