Breaking
Sat. Dec 6th, 2025

மதவாச்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட, கட்டுவல கிராமத்தின் பாதையை புனர்நிர்மாணம் செய்வதற்கான வேலைத்திட்டங்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (12) ஆரம்பித்து வைத்தார்.

மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் வேண்டுகோளுக்கிணங்க, கட்டுவல A9 பிரதான வீதியிலிருந்து கட்டுவல மக்கள் மண்டபம் வரையிலான பாதை புனர்நிர்மாணம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், இஷாக் ரஹ்மான் எம்.பி, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மத் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

(ன)

Related Post